Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: சேலம், சகோதயா அமைப்பு சார்பாக கடந்த 31.10.23 (செவ்வாய்) அன்று நோட்ரிடேம் பள்ளியில் தற்காப்பு கலை சார்ந்த போட்டிகள் நடைபெற்றன.
அதில் 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் P.S.நவீன், A.நிக்கில் ஹரிகார்த்திக் சிலம்பம் மற்றும் வாள்வீச்சுப் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் மூன்றாம் பரிசினை வென்றனர்.
பரிசு பெற்ற மாணவர்களைப் பள்ளியின் முதன்மைச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, நிர்வாக அலுவலர் வினோத்குமார் பள்ளியின் முதல்வர் கணேஷ் ஆகியோர் பாராட்டினர்.